சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றிய தேசிய கொள்கை, சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவம், உள்ளூராட்சி, போக்குவரத்து, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு மற்றும் மின்சாரம் என்பவற்றிற்கு அமைவாக சிறந்த நிர்வாகம், கொள்கை திட்டமிடல் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைப்பாக்கம் என்பவற்றின் ஊடாக தென்மாகாண மக்களுக்கு மிகச்சிறந்த சேவையை வழங்குவதற்கு எமது அமைச்சு தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறது.

மேற்குறிப்பிட்ட துறைகளுக்காக வருடாந்த அபிவிருத்தி திட்டங்களைத் தயாரித்தல், செலவு மதிப்பீடு, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு என்பவை எமது அமைச்சின் பிரதான அபிவிருத்தி செயற்பாடுகளாகும்.

எமது விடயப்பரப்பு

  • சட்டம் மற்றும் ஒழுங்கு
  • சுகாதாரம்
  • உள்ளூராட்சி
  • ஆயுர்வேதம்
  • போக்குவரத்து
  • சுற்றுலாதுறை

பிரதான செயற்பாட்டு பிரிவுகள்

சட்டம் மற்றும் ஒழுங்கு, போக்குவரத்து, நீர் வழங்கல், வடிகாலமைப்பு, மின்சாரம், சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவம், உள்ளூராட்சி என்பவை அமைச்சின் பின்வரும் பிரிவுகளின் கீழ் இயங்குகின்றன.